Thursday, January 6, 2011

சென்னையில் மீண்டும் புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது. ஒவ்வொருமுறை புத்தக கண்காட்சி வரும் பொழுதும் ஒவ்வொரு தினமும் அங்கு நிறைய நேரம் செலவழிக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் ஏனோ ஒரு நாளுக்கு மேல் அங்கு போக முடிவதில்லை. இந்த முறையும் மீண்டும் அந்த எண்ணம் வந்துவிட்டது. நாளை என் ஆதர்ஷ கவிஞர் திரு. வைரமுத்து அவர்களின் உரையாடல் நிகழ்வு உள்ளது. அந்த நிகழ்ச்சியை தவற விடாமல் பார்க்க வேண்டும். அத்துடன் என் மகன்களுக்காக நல்ல புத்தகங்களை வாங்கி தர வேண்டும். வலையில் இணைந்த பிறகு மீண்டும் நிறைய படிக்கும் ஆவல் உருவாகி உள்ளது. எனக்காகவும் புத்தகங்கள் வாங்க வேண்டும். வலைப்பதிவில் மீண்டும் நிறைய எழுத நேரம் ஒதுக்க வேண்டும். இது வைரமுத்துவின் 'புத்தம் புது பூமி வேண்டும்' என்பது போல் உள்ளது :)